அம்பாறை மாவட்ட பட்டதாரிகளை ஒன்லைன் மூலம் பதிவு செய்ய நடவடிக்கை

மேலதிக அரசாங்க அதிபர் விமலநாதன்

அம்பாறை மாவட்டத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகளை பதிவு செய்வதற்கான தரவுத்தளத்தினை ஒன்லைன் ஊடாக பதிவு செய்வதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே. விமலநாதன் தெரிவித்தார்.  

அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளை பதிவு செய்யும் வேலைகள் கடந்த 2012ம் ஆண்டு தொடக்கம் மாவட்ட செயலகத்தினால் விண்ணப்ப படிவங்கள் ஊடாக தரவுகள் பதியப்பட்டு வந்த போதிலும் தூர இடங்களிலிருந்து வருகின்ற போது அதற்கான கால நேரம் பண விரயம் மற்றும் பல அசௌகரிங்கள் என்பவற்றினை கவனத்தில் கொண்டு வேலையற்ற பட்டதாரிகள் இலகுவாக இப் பதிவினை ஒன்லைன் ஊடாக வீட்டில் இருந்தவாறே இலகுவாகவும், துரிதமாகவும்மேற்கொள்ள இம்முறையினை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.  

விண்ணப்பப் படிவத்திலுள்ள தகவல்கள் மிகவும் இலகுவானதோடு புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளமையினால் தரவுகளின் உண்மைத் தன்மையில் எந்தவித சிக்கலும் ஏற்படாமல் இருப்பதைகருத்தில் கொண்டு இந் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.  

இம்முறையினூடாக மாவட்டத்தின் வேலையற்ற பட்டதாரிகள் தரவுத்தளத்தினை செயற்படுத்துவதைநோக்காகக் கருதி எதிர்வரும் காலங்களில் இப்பதிவை ஒன்லைன் ஊடாக மாத்திரம் செய்தல் வேண்டுமென்பதுடன் மாவட்ட செயலகத்தில் இதுவரையில்பதிவு செய்துள்ளவர்களும்மீண்டும் இம் முறையினூடாக பதிவு செய்தல் வேண்டுமெனவும் அறிவித்துள்ளார்.  

இது தொடர்பாக பிரதேச செயலாளர்களிடம் மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.

(ஒலுவில் விசேட நிருபர்)  

Tue, 01/22/2019 - 10:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை