இஸ்ரேல் குடியேற்றவாசிகளின் தாக்குதலில் பலஸ்தீனர் பலி

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் இஸ்ரேலிய படையினர் மற்றும் குடியேற்றவாசிகளுடன் ஏற்பட்ட மோதலில் பலஸ்தீனர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.  

ரமல்லா நகரின் வடகிழக்கில் உள்ள அல் முகைர் கிராமத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 38 வயதான ஹம்தி நாசன் என்ற பலஸ்தீனரின் பின்பக்கமாக துப்பாக்கிக் காயம் ஏற்பட்ட நிலையில் ரமல்லா மருத்துவமனையில் வைத்து உயிரிழந்துள்ளார்.  

இஸ்ரேலிய இராணுவம் வருவதற்கு முன்னர் குடியேற்றவாசிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அந்தக் கிராமத்தின் தலைவர் அமீன் அபூ அல்யா குறிப்பிட்டுள்ளார்.  

“குடியேற்றவாசிகள் ஆரம்பத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதோடு தொடர்ந்து அங்கு வந்த இராணுவம் கண்ணீர் புகைப்பிரயோகம் மேற்கொண்டது” என்று அவர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.  

இஸ்ரேலிய படையினருக்கு பாதுகாப்பாக யூத குடியேற்றவாசிகள் பலஸ்தீன கிராமத்தில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட முயன்றபோதே இந்த மோதல் வெடித்துள்ளதாக உள்ளுர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.      

Mon, 01/28/2019 - 12:53


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை