ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக சாந்த பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தனது பாராளுமன்ற உறுப்புரிமை பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே அவர் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளதாக, அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சாந்த பண்டார, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார் என்பதோடு, கடந்த 2015 தேர்தலில் தோல்வியைத் தழுவியிருந்தார்.
அவர், கடந்த வருடம் மே மாதம் (11), ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
from tkn