சம்பியன் பட்டத்தை வெல்ல முன்னேறும் புளுஸ்டார் அணி

சுகததாஸ விளையாட்டரங்கில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற ரட்னம் மற்றும் புளு ஸ்டார் விளையாட்டுக் கழகங்களுக்கு இடையிலான டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடருக்கான விறுவிறுப்பான மோதல் கோல்கள் எதுவும் இன்றி சமநிலையில் நிறைவுற்றது.

இந்த முடிவால் இரு அணிகளும் தலா ஒரு புள்ளியைப் பெற்றுள்ளன.

எனினும், இம்முறை தரப்படுத்தலில் முதலிடத்தில் உள்ள புளு ஸ்டார் அணி எந்தவித தோல்வியையும் சந்திக்காத அணியாக சம்பியன் கிண்ணத்தை வெல்லும் பயணத்தில் நீடிக்கின்றது.

இந்தப் போட்டி ஆரம்பமாகி முதல் நிமிடத்தில் ரட்னம் வீரர் சசன்க டில்ஹார எதிரணியின் மத்திய களத்தில் இருந்து கோல் நோக்கி உதைந்த பந்தை புளு ஸ்டார் கோல் காப்பாளர் மஞ்சுல பெர்னாண்டோ பாய்ந்து தட்டினார்.

இரு அணிகளும் கடுமையாக போராயபோது முதல் பாதியில் எந்த கோலும் விழவில் இரண்டவாது பாதி ஆட்டமும் இவ்வாறே நீடித்தது.

போட்டியின் இறுதி நிமிடங்களில் இரு அணி வீரர்களுக்கும் ப்ரீ கிக்கிற்கான வாய்ப்புகள் பல கிடைத்த போதும், அவற்றினாலும் எந்தவொரு கோலும் பெறப்படவில்லை.

Fri, 01/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை