வட்ஸ் ஆப்பில் புதிய கட்டுப்பாடு

தகவல் பரிமாற்றத்துக்கு உதவும் வட்ஸ் ஆப் செயலியில் புது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனி 5 பேருக்கு மட்டுமே செய்திகளை போவர்ட் செய்யமுடியும்.

வதந்திகள் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் செய்யப்பட்டுள்ள அந்த மாற்றம் உலக அளவில் எல்லா நாடுகளுக்கும் பொருந்தும் என்று வட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்தது.

இதுவரை ஒருவர், 20 பயனீட்டளார்களுக்கோ, குழுக்களுக்கோ தகவல்களை போவர்ட் செய்ய முடிந்தது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவில் வட்ஸ் ஆப் மூலம் பரவிய வதந்திகளால் சிலர் தாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். இதனால் ஏற்கனவே இந்தக் கட்டுப்பாடு இந்தியாவில் அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பயனாளர்களின் கருத்தைப் பொறுத்து அந்த சேவை மேம்படுத்தப்படும் என்றும் வாட்ஸ் ஆப் நிறுவனம் கூறியுள்ளது.

Wed, 01/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை