2002 பாலி குண்டு தாக்குதலுடன் தொடர்புட்ட முஸ்லிம் மதகுரு அபூபக்கர் பஷீரை முன்கூட்டியே விடுதலை செய்யும் முடிவை இந்தோனேசிய அரசு மீளாய்வு செய்ய முடிவெடுத்துள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்த விமர்சனங்களை அடுத்தே அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
வயது மூப்பு மற்றும் மோசமான உடல்நிலை காரணமாக 81 வயதான பஷீருக்கு முன்கூட்டி விடுதலை அளிக்கப்படும் என்று ஜனாதிபதி ஜொகோ விடோடோ கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த நிபந்தனையற்ற விடுதலையை அரசு மீள் பரிசீலனை செய்வதாக தலைமை பாதுகாப்பு அமைச்சர் விரன்டோ கடந்த திங்கட்கிழமை குறிப்பிட்டுள்ளார்.
போராளிகளுக்கு பயிற்சி அளித்தது குறித்து தீவிரவாத சட்டத்தின் கீழ் 2010 ஆம் ஆண்டு குற்றங்காணப்பட்ட பஷீருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
20 நாடுகளைச் சேர்ந்த 200க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்ட பாலி குண்டு தாக்குதலிலும் அவருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்த தாக்குதலில் 88 பேரை இழந்த அவுஸ்திரேலியா, பஷீர் விடுவிக்கப்படுவதை கடுமையாக எதிர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
from tkn