சுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்

Rizwan Segu Mohideen
சுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்-AJM Muzammil Appointed As Chairman of Central Environment Authority

மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவராக கொழும்பு முன்னாள் மேயர் ஏ.ஜே.எம் முசம்மில் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று (11) முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து, அவர் தனது நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டார்.

ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவரான ஏ.ஜே.எம். முஸம்மில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை கொழும்பு மாநாகர சபையின் மேயராக கடமையாற்றினார்.

அதன் பின்னர் கடந்த 2017 பெப்ரவரி முதல் மலேசியாவுக்கான தூதுவராக செயற்பட்டு வந்தார்.

Fri, 01/11/2019 - 15:51


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை