புதிய எம்.பியாக சாந்த பண்டார சத்தியப்பிரமாணம்

ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினராக சாந்த பண்டார பிரதி சபாநாயகர் முன்னிலையில் நேற்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

பாராளுமன்றம் நேற்று (08) பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறியின் தலைமையில் கூடியது. முதல் நிகழ்வாக புதிய பாராளுமன்ற உறுப்பினர் சத்தியப்பிரமாணம் நடைபெற்றது.

தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், தமது பதவியை இராஜினாமா செய்துள்ளதோடு இது தொடர்பில் ஐ.ம.சு.மு செயலாளரினால் பாராளுமன்ற செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக பதில் பாராளுமன்ற செயலாளர் நேற்று சபையில் அறிவித்தார்.

இந் நிலையில் புதிய எம்.பியாக நியமிக்கப்பட்ட சாந்த பண்டாரவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் எதிரணி எம்.பிக்களும் கைலாகு கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். கடந்த பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட இவர் தோல்வியடைந்திருந்தார்.

ஷம்ஸ் பாஹிம் மகேஸ்வரன் பிரசாத்

Wed, 01/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை