கிழக்கு பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்

 ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் உறுதி

கிழக்கு மாகாணத்திலுள்ள பட்டதாரிகளுக்கு  ஆசிரியர் நியமனம் வழங்கப்படுமென கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் உறுதியளித்துள்ளதாக அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றியத்தின் தலைவர்  ஜெஸீர் தெரிவித்தார். 

கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கு பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்குமாறு ஆளுநரிடம்  விடுத்த வேண்டுகோளுக்கமைய இவ் உறுதிமொழியை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார். 

பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு திறந்த போட்டிப் பரீட்சைக்கு கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் தோற்றி சித்தியடைந்துள்ளவர்களுக்கு இவ் ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளதாகவும்  அவர் தெரிவித்தார். 

ஏனைய வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச திணைக்களங்களில் வெற்றிடங்களை உருவாக்கி நியமனம் வழங்கப்படுமெனவும் ஆளுநர்  தெரிவித்துள்ளதாக அவர் கூறினார். 

வேலையற்ற பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் மற்றும் அரச திணைக்களங்களில் நியமனங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ள மாகாண ஆளுநருக்கு அம்பாறை மாவட்ட வேலையற்ற  பட்டதாரிகள் ஒன்றியம் பாராட்டுத் தெரிவித்து கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றியத்தின் தலைவர்  தெரிவித்தார். 

(ஒலுவில் விசேட நிருபர்)

Mon, 01/14/2019 - 13:45


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை