தேசிய மட்ட பளுதூக்கல் போட்டியில் யாழ் பளுதூக்கல் கழக வீரர்கள் சாதனை

இலங்கை பளுதூக்கல் சம்மேளனத்தினால் அண்மையில் ஏற்பாடுசெய்யப்பட்ட கனிஷ்ட, இளையோர் மற்றும் சிரேஷ்ட தேசிய பளுதூக்கல் போட்டிகளில் யாழ். பளுதூக்கல் கழகத்தைச் சேர்ந்த வீரர்கள் 5 தங்கம், 5 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தியிருந்தனர். தேசிய பளுதூக்கல் போட்டிகள் வரலாற்றில் முதற்தடவையாக யாழ். பளுதூக்கல் கழகத்தைச் சேர்ந்த வீரர்கள் அதிகளவான பதக்கங்களைவென்ற ஆண்களுக்கான சிரேஷ்ட பிரிவிலும் முதற்தடவையாக பதக்கங்களை வெற்றி கொண்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

விளையாட்டுத்துறை அமைச்சின் டொரிங்டன் உள்ளக அரங்கில் கடந்தமாத இறுதியில் நடைபெற்ற இப்போட்டித் தொடரில் நாடளாவியரீதியிலிருந்து 400 இற்கும் அதிகமானவீர,வீராங்கனைகள் பங்கேற்றிருந்தனர். இதில் யாழ். பளுதூக்கல் கழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஏழு வீரர்கள் பங்குபற்றியிருந்தனர்.

அண்மைக்காலமாக பாடசாலை மற்றும் தேசியமட்ட பளுதூக்கல் போட்டிகளில் தங்கப் பதக்கங்ளை வென்று சாதனைகள் படைத்துவருகின்றயாழ். சுண்டுக்குளிமகளிர் கல்லூரியைச் சேர்ந்த விஜயபாஸ்கர் ஆஷுகா, இளையோர் பெண்களுக்கான 64 கிலோகிராம் எடைப் பிரிவில் பங்கொண்டு ஸ்னெச் முறையில் 75 கிலோகிராம் எடையையும்,க்ளீன் அண்ட் ஜேக் முறையில் 103 கிலோகிராம் எடையையும் தூக்கி (ஒட்டுமொத்தமாக 178 கிலோகிராம்) தங்கப் பதக்கம் வென்றார். இந்தமொத்தஎடையானதுஆஷுகாவுக்கு சிரேஷ்ட பிரிவில் தங்கப் பதக்கத்தைவெல்வதற்கும் போதுமானதாக இருந்தது. இதன்படி,பெண்கள் பிரிவில் அதிசிறந்த பளுதூக்கும் வீராங்கனைக்கானவிருதையும் அவர் வென்றார்.

முன்னதாக இவர் கடந்தவருடம் நடைபெற்ற 44ஆவது தேசிய விளையாட்டுவிழாவில் பெண்களுக்கான பளுதூக்கல் போட்டியில் மூன்று புதிய தேசிய சாதனைகளுடன் தங்கப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், 59 கிலோகிராம் எடைப் பிரிவில் பங்குகொண்டவேம்படிஉயர்தரகல்லூரி மாணவிபி. நிலோஜினி, ஸ்னெச் முறையில் 60 கிலோகிராம் எடையையும்,க்ளீன் அண்ட் ஜேக் முறையில் 72 கிலோகிராம் எடையையும் (ஒட்டுமொத்தமாக 132 கிலோகிராம்) தூக்கிதங்கப் பதக்கத்தை வென்றார்.அத்துடன்,சிரேஷ்ட பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும் இவர் தனதாக்கிக் கொண்டார்.

பெண்களுக்கான கனிஷ்ட பிரிவில் 71 கிலோகிராம் எடைப் பிரிவுக்காககளமிறங்கிய,வசா விழா மத்திய கல்லூரி மாணவிகே. ரெஜினா, ஸ்னெச் முறையில் 52 கிலோ கிராம் எடையையும்,க்ளீன் அண்ட் ஜேக் முறையில் 69 கிலோகிராம் எடையையும் தூக்கி (ஒட்டுமொத்தமாக 121 கிலோகிராம்) தங்கப் பதக்கத்தைசுவீகரித்தார். அதேபோல சிரேஷ்ட பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும் அவர் வென்றார்.

பெண்களுக்கான 87 கிலோகிராம் எடைப் பிரிவில் போட்டியிட்ட பாசையூர் புனிதமரியாள் கல்லூரி மாணவி ஜே. மேரிலக்சிகா,ஒட்டுமொத்தமாக 102 கிலோகிராம் (ஸ்னெச் 45 கிலோகிராம்,க்ளீன் அண்ட் ஜேக் 57 கிலோகிராம்) எடையைத் தூக்கிதங்கப் பதக்கத்தை வென்றதுடன்,பெண்களுக்கான சிரேஷ்ட பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார்.

பாடசாலை மட்ட மெய்வல்லுனர் போட்டிகளில் மைதான நிகழ்ச்சிகளில் திறமைகளை வெளிப்படுத்திபதக்கங்களை வென்றுவருகின்ற மேரிலக்ஷகா, கடந்தவருடம் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டுவிழாவில் பதக்கங்களை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பெண்களுக்கான 76 கிலோ கிராம் எடைப் பிரிவில் போட்டியிட்டமுல்லைத்தீவு பாண்டியன் குளம் மத்தியகல்லூரியைச் சேர்ந்த ஜி. நிரூஷா,மொத்தமாக 76 கிலோகிராம் (ஸ்னெச் 33 கிலோகிராம்,க்ளீன் அண்ட் ஜேர்க் 55 கிலோ கிராம்) எடையைத் தூக்கிவெள்ளிப் பதக்கம் வென்றார்.

பெண்களுக்கான 45 கிலோ கிராம் எடைப் பிரிவில் போட்டியிட்ட அதேகல்லூரியைச் சேர்ந்த ரீ. தர்ஷூகா ஒட்டுமொத்தமாக 75 கிலோகிராம் எடையைத் தூக்கி வெண்கலப் பதக்கம் வென்றார். இவர் ஸ்னெச் முறையில் 33 கிலோகிராம் எடையையும்,க்ளீன் அண்ட் ஜேக் முறையில் 42 கிலோ கிராம் எடையையும் தூக்கியிருந்தார்.

இளையோர் பெண்களுக்கான 64 கிலோ கிராம் எடைப் பிரிவில் பங்குகொண்டயாழ். இந்துமகளிர் கல்லூரியைச் சேர்ந்த ஜே. பஜீனா ஒட்டு மொத்தமாக 97 கிலோகிராம் (ஸ்னெச் 42 கிலோ கிராம்,க்ளீன் அண்ட் ஜேக் 55 கிலோ. கிராம்) எடையைத் தூக்கிவெள்ளிப் பதக்கம் வென்றார்.

இது இவ்வாறிருக்க,ஆண்கள் பிரிவில் யாழ். பளுதூக்கல் கழகம் சார்பாக போட்டியிட்ட 2 வீரர்களும் பதக்கங்களைசுவீகரித்துக் கொண்டனர்.

இளையோர் ஆண்களுக்கான 102 கிலோகிராம் எடைப் பிரிவில் போட்டியிட்டு ஸ்னெச் முறையில் 55 கிலோகிராம் எடையையும்,க்ளீன் அண்ட் ஜேக் முறையில் 65 கிலோகிராம் எடையையும் தூக்கி ஒட்டு மொத்தமாக 120 கிலோகிராம் எடையைத் தூக்கிய மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலயத்தைச் சேர்ந்தரீ. திவானுஜன் வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

அத்துடன்,சிரேஷ்ட ஆண்களுக்கான 102 கிலோகிராம் எடைப் பிரிவில் போட்டியிட்டஆஷுகாவின் சகோதரனான விஜய பாஸ்கர் விஜயசங்கர் ஒட்டுமொத்தமாக 250 கிலோகிராம் எடையைத் தூக்கி வெண்கலப் பதக்கம் வென்றார். இவர் ஸ்னெச் முறையில் 106 கிலோகிராம் எடையையும்,க்ளீன் அண்ட் ஜேக் முறையில் 144 கிலோ கிராம் எடையையும் தூக்கினார். தேசிய மட்டப் போட்டிகளில் வடமாகாணம் சார்பாக சிரேஷ்ட பிரிவில் பதக்கமொன்றைப் பெற்றுக்கொண்டமுதல் வீரர் என்ற பெருமையையும் விஜயசங்கர் பெற்றுக்கொண்டார். சிரேஷ்ட ஆண்களுக்கான 102இற்கும் மேற்பட்டஎடைப் பிரிவில் பங்குகொண்டஎன். டிலக்ஸ்குமார் ஸ்னெச் முறையில் 120 கிலோ கிராம் எடையையும்,க்ளீன் அண்ட் ஜேக் முறையில் 100 கிலோகிராம் எடையையும் தூக்கி (ஒட்டுமொத்தமாக 210 கிலோகிராம்) வெண்கலப் பதக்கத்தைவென்றார்.

அத்துடன்,அண்மைக்காலமாக தேசிய மட்டத்தில் நடைபெறுகின்ற பளுதூக்கல் போட்டிகளில் வடமாகாணத்துக்கு பலவெற்றிகளைப் பெற்றுக்கொடுத்த ஒரு கழகமாக யாழ். பளுதூக்கல் விளையாட்டு கழகம் விளங்குகின்றது.

சுமார் 25 மாணவர்கள் தற்போது பயிற்சிகள் அங்குபயிற்சிகளைபெற்றுவருவதுடன்,அவர்களுக்கான பயிற்சிகளை வடமாகாணத்தைச் சேர்ந்த நட்சத்திர பளுதூக்கல் வீரரும்,தேசியசம்பியன் ஆஷூகாவின் தந்தையுமான விஜயபாஸ்கர் முன்னெடுத்துவருகின்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

(பீ.எப் மொஹமட்) 

 

Sat, 01/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை