இனவெறி பேச்சு சர்பிராஸ் அகமதுவை மன்னித்துவிட்டோம்

டு பிளிசிஸ்

பெலுக்வாயோ குறித்து சர்பிராஸ் அகமது சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை நாங்கள் மன்னித்துவிட்டோம் என்று தென்ஆபிரிக்க அணியின் தலைவர் டு பிளிசிஸ் தெரிவித்துள்ளார். தென்ஆபிரிக்கா - பாகிஸ்தான் மோதிய 2-வது ஒருநாள் போட்டி டர்பனில் நடைபெற்றது. தென்ஆபிரிக்கா சேஸிங் செய்யும்போது, பெலுக்வாயோ துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்தார். அப்போது பாகிஸ்தான் அணியின் தலைவர் சர்பிராஸ் அகமது தென் பெலுக்வாயோவை இனவெறியுடன் பேசினார்.

இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தென்ஆப்பிரிக்க அணி கேப்டன் டு பிளிசிஸ் கூறும்போது, ‘‘சர்பிராஸ் அகமது தனது பேச்சு குறித்து மன்னிப்பு கேட்டுவிட்டார். அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். எனவே அவரை நாங்கள் மன்னித்து விட்டோம்’’ என்றார்.

Sat, 01/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை