வவுனியாவில் குளத்தில் வீழ்ந்து இரு இளைஞர்கள் பலி

வவுனியா ஈரட்டை பெரியகுளத்தில் இன்று (15) மதியம் 1.45மணியளவில் இரு இளைஞர்கள் குளத்தினுள் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியா ஈரட்டைபெரியகுளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈரட்டை பெரியகுளத்திற்கு அருகே ஆறு இளைஞர்கள் மதிய உணவு சாப்பிட்டுள்ளனர்.

அதன் பின்னர் கைகழுவச் சென்ற சமயத்தில் குளத்தினுள் இரு இளைஞர்கள் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்ட இரு இளைஞர்களும் கூமாங்குளம் கிராமத்தை சேர்ந்த 16 வயது மதிக்கத்தக்கவர்கள் எனவும் இவர்களின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஈரட்டை பெரியகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.

(கோவில்குளம் குறூப் நிருபர்– காந்தன் குணா)

Tue, 01/15/2019 - 16:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை