மன்னார்- அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையின் வீதி ஓட்டப்போட்டி

மன்னார்-அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையின் 2019 ஆம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியின் முதல் நிகழ்வான வீதி ஓட்டப்போட்டி(மரதன்) நேற்று வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் பாடசாலைக்கு முன் ஆரம்பமானது.

பாடசாலையின் அதிபர் எம்.வை.மாஹிர் வீதி ஓட்டப்போட்டியினை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

பாடசாலைக்கு முன் ஆரம்பமான குறித்த போட்டி பிரதான வீதியூடாக சென்று மன்னார் வைத்தியசாலை வீதியை சென்றடைந்தது.

அதனைத்தொடர்ந்து மன்னார் பள்ளிடுனை வீதியூடாக சென்று மன்னார் பஸார் பகுதியை சென்றடைந்து மீண்டும் பாடசாலையை சென்றடைந்தது.

இதன் போது குறித்த போட்டியில் 1 ஆம் இடத்தினை தாஜ் இல்லத்தைச் சேர்ந்த எம்.எம்.எம்.முஜாகிர் மற்றும் 2 ஆம்,3 ஆம் இடங்களை சம்ஸ் இல்லத்தைச் சேர்ந்த வீரர்களாக எம்.எல்.எம்.சல்மான் பாரீஸ் மற்றும் எம்.கே.எம்.வசீம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

இதே வேளை 2019 ஆம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியின் முதல் நிகழ்வான வீதி ஓட்டப்போட்டியானது (மரதன்) இன்றைய தினம் மன்னார் சித்திவிநாயகர் இந்தக்கல்லூரி மற்றும் மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரி ஆகிவற்றிலும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் குறூப் நிருபர்

Sat, 01/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை