ஜனாபதி பதவியேற்பு நிகழ்வுக்கு நான்கு வருட நிறைவு

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்று ஜனவரி 08 ஆம் திகதியுடன் நான்கு ஆண்டுகாலம் நிறைவடைகின்றது.

இலங்கையின் 7வது ஜனாதிபதியாக மைத்ரிபால சிறிசேன கடந்த 09.01.2015 ஆம் திகதியன்று பதவியேற்றுக் கொண்டதையடுத்து நாளையுடன் நான்கு வருடங்கள் நிறைவுபெறுகின்றன.

அதனை முன்னிட்டு ஜனாதிபதிக்கு ஆசி வேண்டி  ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரித் பாராயண நிகழ்வு நாளை (07) இரவு முதல் மறுநாள் அதிகாலை வரையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

நாடளாவிய ரீதியில் பல்வேறு பிதேசங்களிலிருந்து மகாசங்கத்தினர் இந்நிகழ்விற்கு வருகை தரவுள்ளதுடன், மறுநாள் காலையில் மகாசங்கத்தினருக்கு அன்னதானம் வழங்கப்படவுள்ளமையும் சிறப்பம்சமாகும்.

ஜனாதிபதி செயலகத்தின் பணிக்குழாமினரால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

 

 

Sun, 01/06/2019 - 15:52


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை