மாளிகாவத்தை அணியினர் வெற்றி

இலங்கை சொக்கர் மாஸ்ரர்ஸ் சங்கத்தினால் அகில இலங்கை ரீதியாக 40 வயதுக்கு மேற்பட்டவர்களைக் கொண்ட கழகங்களுக்கு இடையே நடாத்தப்பட்டு வருகின்ற உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியின் போட்டிகளுள் ஒன்றான திருகோணமலை ஒலிம்பிக்ஸ் மற்றும் மாளிகாவத்தை, கொழும்பு ஆகிய அணிகளுக்கு இடையிலானபோட்டி கடந்த சனிக்கிழமை (ஜனவரி 12) திருகோணமலைஏகாம்பரம் விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இப்போட்டியில் மாளிகாவத்தைஅணியானதுதிருகோணமலைஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்தை 04 – 00 என்ற கோல் கணக்கில் வெற்றி கொண்டது. ஒலிம்பிக்ஸ் அணியைச் சேர்ந்த எம்.ரவிந்திரராஜா 02வது நிமிடத்தில் தனது அணியின் கோலுக்குள் அடித்துப் பெற்ற கோலானது மாளிகாவத்தை அணிக்கு உரித்தாயிற்று.

தொடர்நது 15வதுமற்றும் 58வது நிமிடத்தில் மாளிகாவத்தைஅணியைச் சேர்ந்தஏ.கே.எம். நஜீப்டீன் இரண்டுகோல்களையும் 28வதுநிமிடத்தில் என்.ஏ.எம்.ஹூசைன் ஒருகோலையும் அணிக்காக ஈட்டிக்கொடுத்தனர்.

இப்போட்டியில் மாளிகாவத்தை அணியினர் வெற்றி யீட்டியமையால் அவர்கள் காலிறுதிப் போட்டிகளில் விளையாட தகுதிபெற்றுள்ளனர்.

திருகோணமலை விளையாட்டு நிருபர்

Tue, 01/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை