நீதிபதிகள் நால்வர் பதவிப்பிரமாணம்

RSM
நீதிபதிகள் நால்வர் பதவிப்பிரமாணம்-4 Judges Promoted-Took Oath

- மேன்முறையீட்டு நீதிபதிகள் மூவர் உயர் நீதிபதிகளாக
- மேல் நீதிமன்ற நீதிபதி கே.பி.பெனாண்டோ மேன்முறையீட்டு நீதிபதியாக

உயர் நீதிமன்ற நீதிபதிகள் மூவர், மேன்முறையீட்டு நீதிபதி ஒருவரும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

இன்று (09) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் அவர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் பிரீத்தி பத்மன் சூரசேன, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி எஸ். துரைராஜா, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஈ.ஏ.ஜீ.ஆர். அமரசேகர ஆகியோர் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

இதேவேளை, மேல் நீதிமன்றத்தின் நீதிபதி கே.பி. பெனாண்டோ புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

நீதிபதிகள் நால்வர் பதவிப்பிரமாணம்-4 Judges Promoted-Took Oath

1. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் பிரீத்தி பத்மன் சூரசேன உயர் நீதிமன்ற நீதிபதி

நீதிபதிகள் நால்வர் பதவிப்பிரமாணம்-4 Judges Promoted-Took Oath

2. மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி எஸ். துரைராஜா உயர் நீதிமன்ற நீதிபதி

நீதிபதிகள் நால்வர் பதவிப்பிரமாணம்-4 Judges Promoted-Took Oath
3. மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஈ.ஏ.ஜீ.ஆர். அமரசேகர உயர் நீதிமன்ற நீதிபதி

நீதிபதிகள் நால்வர் பதவிப்பிரமாணம்-4 Judges Promoted-Took Oath
4. மேல் நீதிமன்ற நீதிபதி கே.பி. பெனாண்டோ - மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி

இந்நிகழ்வில், ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்னவும் கலந்துகொண்டார்.

Wed, 01/09/2019 - 16:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை