“உத்தரதேவி” பயணிகளுடன் யாழ்ப்பாணம் வருகை

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எஸ்.13குளிரூட்டப்பட்ட அதிவேக  சொகுசு புகையிரதம் “உத்தரதேவி”  பயணிகளுடன் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது.

கொழும்பிலிருந்து இன்று(27) காலையில் தனது பயணத்தை ஆரம்பித்த உத்தரதேவி பிற்பகல் 2.40மணியளவில் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது.

இந்த பயணத்தில் போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, அமைச்சின் செயலாளர், உதவிச் செயலாளர், புகையிரத நிலைய அதிகாரிகள்   எனப் பலரும் பயணம் மேற்கொண்டிருந்தனர்.

இதேவேளை, தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் ஆகியோர் யாழ்.பிரதான புகையிரத நிலையத்தில் வைத்து அவர்களை வரவேற்றனர்.

இதன்போது தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

(பாறுக் ஷிஹான், சுமித்தி தங்கராசா)

Sun, 01/27/2019 - 17:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை