பாற்குடபவனியில் பெருமளவிலான பெண்கள் பங்கேற்பு

புதுவருடத்தை முன்னிட்டு கல்வியங்காடு ஸ்ரீ வீரபத்திரர் சபரீச ஐயப்பன் கோவிலில் பாற்குடபவனியும் 108 கலச சங்காபிசேகமும் இன்று(01)காலை இடம்பெற்றது.

யாழ் நல்லூர் சட்டநாதர் சிவன் கோவிலில் இடம்பெற்ற விஷேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து சட்டநாதர் சிவன் ஆலயத்திலிருந்து கல்வியங்காடு ஸ்ரீ வீரபத்திரர் சபரீச ஐயப்பன் கோவில் நோக்கி பாற்குட பவனி ஆரம்பமானது.

இவ் பவனியில் பெருமளவிலான பெண்கள் கலந்துகொண்டனர்.

பாற்குடபவனி வீரபத்திரர் சபரீச ஐயப்பன் ஆலயத்தை சென்றடைந்ததும் ஸ்ரீ வீரபத்திரர் சபரீச ஐயப்ப சுவாமிக்கு 108 கலச அபிசேகம் இடம்பெற்றது.

இப் பூஜை வழிபாட்டில் பெருமளவிலான ஐயப்பன் அடியவர்கள் கலந்துகொண்டனர்.

(யாழ்.விசேட நிருபர் - மயூரப் பிரியன்)
 
Wed, 01/02/2019 - 12:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை