இப்படி பேசலாமா மோடி?

 

இவ்வருடம்இந்தியத்தேர்தல்

கடந்த2014ம் ஆண்டு 69 சதவீத எதிர்க்கட்சிகள் வாக்கு சிதறியதால், 31 சதவீதம் வாக்குகளில் பெரும்பான்மை இடங்களைப் பெற்று இந்தியப் பிரதமரானவர் மோடி. இதுவரை அவர்பத்திரிகையாளர்களை சந்தித்ததில்லை. நாடாளுமன்ற விவாதங்களில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்ததில்லை.

பதவியேற்ற நான்கரை ஆண்டுகளில்19 நாட்கள் மட்டுமே பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வந்திருக்கிறார். அதுவும் பெரும்பாலும் பார்வையாளராகவே அமர்ந்திருக்கிறார். 2 ஆயிரத்து 21 கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்து 92 நாடுகளுக்குப் பயணித்திருக்கிறார். ஒன்றுமே சாதிக்காமல் வெறும் திட்ட அறிவிப்புக்காக மட்டுமே 4 ஆயிரத்து 126 கோடி ரூபா  விளம்பரத்துக்காக செலவழித்திருக்கிறார்.

வெளிநாடு செல்லும் பிரதமர்கள் செய்தியாளர்களை அழைத்துச் செல்வார்கள். வெளிநாடுகளில் அந்தந்த நாட்டு தலைவர்களுடன் பிரதமர் பத்திரிகையாளர்களைச் சந்திப்பார். அப்போது தெரிவிக்கும் விபரங்களை பத்திரிகைகள் வெளியிடுவது 2014க்கு முன்புவரை கடைப்பிடிக்கப்பட்ட வழக்கம்.

ஆனால், கடந்த நான்கரை ஆண்டுகளில் மோடி தனது பயணத்தின் போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்ததே இல்லை. வெறும் சந்திப்பு புகைப்படங்களை மட்டுமே தருவது வழக்கமாகி விட்டது. அதிகபட்சமாக, வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களைச் சந்தித்து, அவர்களிடம் தனது சாதனைகளை விளக்கி விட்டு வந்திருக்கிறார் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

இவ்வாறிருக்ைகயில் உலகநாடுகளில் நாடாளுமன்றங்களில்8 மணி நேரம் விவாதம் நடப்பதாகவும் நாமும் அதுபோல ஆரோக்கியமான விவாதங்களை நடத்தலாம் என்றும் நேற்றுமுன்தினம் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.

அதாவது, இந்தப் பேட்டியை வழக்கமான செய்தியாளர் பேட்டியாக நினைத்து விடக் கூடாது. இந்தப் பேட்டிக்காக மோடியிடம் கேட்கப்படும் கேள்விகளை முதலிலேயே எழுதிக் கொடுத்து விட வேண்டும். பிறகு அவற்றுக்கு பதிலை அவர் தயார் செய்து விட்டு, அந்தப் பதிலில் தவறு இருந்தால் திருத்தி விட்டு ஒளிபரப்பாகிற பேட்டியே இதுவாகும்.

இந்தப் பேட்டியில்தான் வெளிநாட்டு நாடாளுமன்றங்களைப் பற்றி பேசியிருக்கிறார் அவர். இந்திய நாடாளுமன்றத்தில் அதுபோன்ற ஆரோக்கியமான விவாதங்களை அறிமுகப்படுத்த வேண்டிய பொறுப்பு யாருடையது என்பதை மோடி மறந்து விட்டார். அதுபோன்ற விவாதங்களை ஆரோக்கியமான தலைப்புகளில் விவாதிக்க இவர் முன்வந்ததைப் போலவும், யாரோ இவரைத் தடுத்ததைப் போலவும் பதில் கூறியிருக்கிறார்.

நிஜத்தில் நாடாளுமன்றத்துக்கே அதிகம் வராதவர்  இவர்.அப்படியிருக்க இதுபோன்ற பெரிய விஷயங்களையெல்லாம் கூசாமல் பேசியிருக்கிறார்.

இந்தப் பேட்டியில் இன்னொரு விடயத்தையும் கூறியிருக்கிறார் மோடி. அதாவது, 2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல் சாமானியனான தனக்கும் எதிர்க்கட்சிகளின் மகாகூட்டணிக்கும் இடையிலான போட்டி என்று கூறியிருக்கிறார்.

மோடி என்ற தனி மனிதனின் வெற்றியாகவே2014 வெற்றியை விளம்பரம் செய்தார்கள். நிஜத்தில் அந்தத் தேர்தலில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சுமார் 21 கட்சிகளை கூட்டணியாக சேர்த்தே பா.ஜ.க தேர்தலை சந்தித்தது. இப்போதும் அந்தக் கூட்டணியில் இருந்து வெளியேறிய சிவசேனா, தெலுங்குதேசம் உள்ளிட்ட சில கட்சிகளைத் தவிர, ஐக்கிய ஜனதாதளம், அகாலிதளம், லோக் ஜனசக்தி உள்ளிட்ட 17க்கு மேற்பட்ட கட்சிகளை தனது கூட்டணியில் வைத்திருக்கிறது பாஜக.

உண்மை இப்படி இருக்க, மோடி  இந்தப் பேட்டியில் வேறு விதமாகக் குறிப்பிட்டிருக்கிறார். சட்டீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜக தோற்றதை தனது பேட்டியில் தவிர்த்து விட்டு, தெலுங்கானாவில் தனக்கு எதிரான கூட்டணி தோல்வியடைந்தது என்று கூறியிருக்கிறார். அங்கு முக்கிய கட்சியாக டி.ஆர்.எஸ்சுக்கும் காங்கிரஸ் கூட்டணிக்கும்தான் போட்டி இருந்தது என்பதை மோடி வசதியாக மறைக்கிறார்.

ரபேல் விமான ஊழலில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தனக்குச் சாதகமாக அமைந்ததாகக் கூறியிருக்கிறார் மோடி. ஆனால், உச்சநீதிமன்றத்தில் தவறான தகவல்களை அறிக்கையாக அளித்து அந்தத் தீர்ப்பு பெறப்பட்டது என்பதை மறைத்திருக்கிறார். அப்படி அவர் மறைத்த விஷயத்தை எதிர்க்கேள்வியாக கேட்க அங்கே செய்தியாளர் இல்லை என்பதை தனக்கு சாதகமாக ஆக்கியிருக்கிறார் என்பதை மறந்து விடக் கூடாது.

பெண்களுக்கு எதிரான கூட்டு வன்முறைக்கு எதிராக அனைவரும் நிற்க வேண்டும் என்றும், இந்த விஷயத்தை அரசியலாக்கக் கூடாது என்றும் மோடி கூறியிருக்கிறார். காஷ்மீரில் ஆஷிபா, உ.பி.யில் உன்னாவோ கிராமத்தில் 15 வயது சிறுமி உள்ளிட்ட பல பாலியல் பலாத்கார விவகாரங்களில் சிக்கிய பா.ஜ.க எம்.எல்ஏக்களைப் பற்றி மோடியிடம் ஏ.என்.ஐ நிருபர் எதிர்க்கேள்வி கேட்காததால் இஷ்டத்துக்கு பேசியிருக்கிறார் மோடி.

மொத்தத்தில் அவருடைய பேட்டியைப் பற்றி இரண்டாவது பகுதி விமர்சனம் செய்யும் அளவுக்கு வெறும் போலி வார்த்தைகளை விதைத்திருக்கிறார் மோடி.

Thu, 01/03/2019 - 10:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை