முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா முல்லைத்தீவு விஜயம்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க முல்லைத்தீவு மாவட்டத்துக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இன்று காலை 11 மணியளவில் உலங்குவானூர்தி மூலம் முல்லைத்தீவுக்கு வருகைதந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவைமுல்லைத்தீவு மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் வரவேற்றார்.

அவர்முல்லைத்தீவு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில்நடந்த அதிகாரிகளுடனான கலந்துரையாடலில்பங்குகொண்டு அவருடைய தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க செயலகத்தினால்முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் மற்றும் கடந்த மாதம் ஏற்ப்பட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பான பாதிப்புக்கள் தொடர்பில் இதன்போது கேட்டரிந்துகொண்டார்.

 (மாங்குளம் குருப் நிருபர்)

Wed, 01/09/2019 - 12:15


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை