எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (22) பாராளுமன்ற கட்டடத்தொகுதியிலுள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் தமது பணிகளை ஆரம்பித்தார்.
இன்று முற்பகல் 2.00 மணியளவில் பாராளுமன்றத்தில் மூன்றாவது மாடியில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்திற்கு வருகை தந்த அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
முதலாவது ஆவணத்தில் கையெழுத்திட்ட அவர் அதனை எதிர்கட்சி தலைவரின் செயலாளரிடம் கையளித்தார். இந்நிகழ்வில் ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
(ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்)
Tue, 01/22/2019 - 16:27
from tkn