மன்னார் மனித புதைகுழி எச்சங்கள் காபன் பரிசோதனைக்காக கையழிப்பு

மன்னார் மனித புதை குழி அகழ்வு பணிகளின் போது அடையாளம் காணப்பட்டுஆய்வுக்காக தெரிவு செய்யப்பட்ட மனித எச்சங்கள் அனைத்தும் நேற்று முந்தினம்(25)காபன் பரிசோதனைக்காக தெரிவு செய்யப்பட்ட ஆய்வு கூடத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.

காபன் பரிசோதனை செய்வதற்கு அடையாளப்படுத்தப்பட்ட 6மனித எச்சங்கள் அடங்கிய பொதிகள் மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதியின் கட்டளைக்கு அமைவாக கடந்த புதன்கிழமை(23)பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் இருந்து விமான நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.

குறித்த மனித எச்சங்கள் B/295எனும் இலக்கமிடப்ப்பட்டு குறித்த ஆய்வகத்தில் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷதலைமையில் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த மனித எச்சங்களைகையலிக்கும் நிகழ்வில் காளாமல் போனோர் அலுவலக ஆணையாளர் மிராக் ரஹீம், காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பாக வாதிடும் சட்டத்தரணி வி.நிரஞ்சன் மற்றும் ரஞ்சிதா ஆகியோர் உடன் இருந்தமை குறிப்பிட தக்கது.

(மன்னார் குறூப் நிருபர்– லம்பட் ரொஸாரியன்)

Sun, 01/27/2019 - 09:35


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை