தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஜனாதிபதி இன்னும் முடிவுசெய்யவில்லை

ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதா இல்லையா என ஜனாதிபதி இதுவரை முடிவு செய்யவில்லை என சுதந்திரக் கட்சி செயலாளர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்தார். அவரை தான் அடுத்த வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்ற முடிவில் நானும் இருக்கிறேன். ஆனால் ஜனாதிபதி இன்னும் எந்த அறிவிப்பும் செய்யாதிருப்பதாகவும் அவர் கூறினார்.

கட்சித் தலைமையகத்தில் நேற்றுநடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர்,

ஐ.தே.க வேட்பாளர் யார் என அந்தக் கட்சியிலும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. சஜித் என சிலர் கூறுகையில் ரணில் என வேறு சிலர் அறிவித்துள்ளனர். எமக்கு இதில் யார் போட்டியிட்டாலும் அது சவாலாக இருக்காது.

இடதுசாரி மக்கள் எமது அரசாங்கமொன்றையே எதிர்பார்த்துள்ளனர். அதற்காக பொதுஜன பெரமுனவும் சு.கவும் இணைந்து செயற்பட வேண்டும். இரு கட்சிகளும் தமது தனித்துவத்தை பேணி செயற்பட்டாலே பலமாக முன்னேற முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். (பா)

Fri, 01/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை