அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயரும், முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினருமான அஸ்மி அப்துல் கபூர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவுக்கு அமைய பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு விடுக்கப்பட்ட உத்தரவுக்கு அமைய அப்பிரிவில் முன்னிலையாகாமை காரணமாக அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை தொடர்பில், அவரிடம் தற்போது வாக்குமூலம் பெறப்பட்டு வருவதாக அப்பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேகநபரை இன்றைய தினம் (17) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thu, 01/17/2019 - 14:23
from tkn