சட்டவிரோதமாக படகில் தாயகம் திரும்ப முற்பட்ட இரு சகோதரர்கள் கைது

மன்னார் குறூப் நிருபர்

தமிழகத்திலிருந்து சட்ட விரோதமாக இலங்கைக்கு வருவதற்கு முயற்சித்த இரண்டு பேரை இந்திய கடலோரக் காவற்படையினர் 15ஆம் திகதி மாலை கைது செய்துள்ளனர். இவர்கள் இராமேஸ்வரம் மண்டபத்திலிருந்து சட்ட விரோதமாக இலங்கைக்கு சிறிய ரக கண்ணாடி இழை படகில் வந்து கொண்டிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய கடலோரக் காவற்படையினர் மன்னார் வளைகுடா கடற்பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையிலே சந்தேகத்திற்கு இடமான வகையில் கண்ணாடி இழைப்படகில் இருவர் பயணிப்பதை அவதானித்த காவற்படையினர் இருவரையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் சகோதரர்களெனவும் சிவராஜா மற்றும் அன்பு குமரன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இருவரும் இலங்கையிலிருந்து யுத்தம் காரணமாக கடந்த 1990 ஆம் ஆண்டு படகு மூலம் அகதிகளாக தமிழகத்திற்குச் சென்றதாகவும் தற்போது இவர்கள் மதுரை ஆனையூர் முகாமில் தங்கியுள்ளதாக விசாரனைகள் மூலம் தெரிய வந்துள்ளது. மேலதிக விசாரனைகளை இந்திய கடலோக காவற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Thu, 01/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை