அரசாங்கத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி வேலைத்திட்டத்தின் சப்ரகமுவ மாகாண நிகழ்வு (27) இடம்பெற்றது. மேற்படி நிகழ்வு சப்ரகமுவ மாகாண சபை கட்டிடத்தொகுதி வளாகத்தில் இடம்பெற்றது. இன்று காலை இரத்தினபுரி புதிய நகரில் அமைந்துள்ள சப்ரகமுவ மாகாண சபை கட்டிடத்தொகுதியிலிருந்து இரத்தினபுரி நீதிமன்ற கட்டிடத்தொகுதி சந்தி வரை பாதயாத்திரை நிகழ்வும் இடம்பெற்றது.
அரச சேவையாளர்களுக்கு நோயற்ற வாழ்வை ஏற்படுத்தி கொடுப்பதற்கே மேற்படி வேலைத்திட்டம் அரசாங்கத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மேற்படி நிகழ்வில் சப்ரகமுவ மாகாண ஆளுநர் நிலுக்கா ஏக்கநாயக்க மற்றும் மாகாண பிரதான செயலாளர் டி.எம்.மாலணி, மாகாண அரச சேவை ஆணைக் குழுவின் செயலாளர் சுனேத்ரா குணவர்தன மற்றும் மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் அதிகாரிகள் உட்பட அரச சேவையாளர்கள் ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
(காவத்தை தினகரன் விசேட நிருபர்)
from tkn