கருங்கடலில் இரு கப்பல்களில் தீ: பதினொரு மாலுமிகள் பலி

கெர்ச் நீரிணைக்கு அருகில் கருங்கடலில் தன்சானிய நாட்டு கொடியுடனான இரு சரக்குக் கப்பல்களில் ஏற்பட்ட தீ காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளனர்.  

கப்பல்களில் இருந்து கடலுக்குள் பாய்ந்த மாலுமிகளை காப்பற்ற ரஷ்ய மீட்பாளர்கள் அங்கு விரைந்துள்ளனர். இதுவரை பதினான்கு பேர் மீட்கப்பட்டுள்ளனர்.  

இதில் ஒரு கப்பல் எரிவாயு டாங்கர் என்பதோடு வெடிப்பு ஒன்றை அடுத்தே தீ ஏற்பட்டிருப்பதோடு அது மற்றைய கப்பலுக்கு பரவியுள்ளது. எனினும் ஒரு கப்பலில் இருந்து மற்றைய கப்பலுக்கு எரிபொருளை பரிமாற்றும்போதே தீ ஏற்பட்டிருப்பதாக ரஷ்ய கடல்சார் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.      

Wed, 01/23/2019 - 13:05


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை