4 பேர் படுகாயம்
முல்லைத்தீவு பகுதிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஜயம் செய்த நிலையில் பாதுகாப்பிற்காக சென்ற இராணுவ வாகனம் தட்டாமலைப் பகுதியில் விபத்துக்குள்ளானதில் இரு இராணுவத்தினர் பலியானதுடன் நால்வர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்துச் சம்பவம் இன்று (21) மதியம் 1.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவுக்கு ஜனாதிபதி இன்று வருகை தந்திருந்த நிலையில் அவரது பாதுகாப்பிற்காக சென்ற இராணுவ கொமாண்டோ படையணியே பாதுகாப்பு பணியை நிறைவு செய்து வவுனியா பகுதி நோக்கி திரும்பிச் சென்ற நிலையில் இவ்விபத்தில் சிக்கியுள்ளது.
வேகமாக வந்த இராணுவ வாகனம் தட்டாமலைப் பகுதியில் உள்ள வளைவில் திரும்பிய போது வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்காகியுள்ளது. இதன்போது 6 இராணுவத்தினர் படுகாயமடைந்த நிலையில் அம்பியுலன்ஸ் வண்டிகளில் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
எனினும், விபத்தில் காயமடைந்தவர்களில் இருவர் பலியாகியுள்ளதுடன், நால்வர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் இருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.
(வவுனியா விசேட நிருபர் - கே. வசந்தரூபன்)
from tkn