அமைச்சர் சாகல ரத்னாயக்க ஜப்பான் தூதுவருடன் சந்திப்பு

ஜப்பான் மற்றும் இலங்கை அபிவிருத்தித்துறையின் நடைமுறை அனுபவங்களை பரிமாறிக்கொள்ளவும் துறைமுகம் மற்றும் கப்பற்றுறை தொடர்பாக இரு தரப்பு தொழில்நுட்ப அறிவை அபிவிருத்தி செய்யும் நோக்கிலும் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் Akira Sugiyama வை (27) துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க சந்தித்து பேச்சு நடத்தினார்.

அமைச்சர் சாகல ரத்னாயக்க, ஐக்கிய தேசிய கட்சியின் சர்வதேச அலுவல்கள் தொடர்பிலான செயலாளராக நியமிக்கப்பட்டதன் பின்னர் முதன் முறையாக இராஜதந்திரி ஒருவருடன் கலந்துரையாடலில் ஈடுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Wed, 01/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை