காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம்

தேசிய போதைப்பொருள் தடுப்பு பாடசாலை வார நிகழ்வை அங்குரார்ப்பணம் செய்வதற்கு ஜனாதிபதி முல்லைத்தீவு மாவட்டத்துக்கு மேற்கொள்ளும் விஜயத்தை ஒட்டி வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் இன்று (21) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

தேசிய போதைப்பொருள் தடுப்பு பாடசாலை வாரம் இன்று (21) தொடக்கம் 28 ஆம் திகதி வரை நாட்டில் உள்ள சகல பாடசாலைகளிலும் ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதன் தொடக்க நிகழ்வில் கலந்துகொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முல்லைத்தீவு வித்தியானந்த கல்லூரிக்கு வருகைதந்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள  வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் விரைவில் தங்களுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்று கோரி685நாட்களுக்கு மேலாகபோராட்டத்தினை நடத்திவருகின்றார்கள்.

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் ஜனாதிபதி வருகையின் போதும்மக்கள்கவனயீர்ப்புபோராட்டத்தில் ஈடுபட்டனர்.

(மாங்குளம் குறூப் நிருபர்– சன்முகம் தவசீலன்)

Mon, 01/21/2019 - 15:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை