ஒன்பது மீன்பிடி படகுகள் இந்தியாவிடம் மீள ஒப்படைப்பு

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்த ஒன்பது இந்திய மீன்பிடிப் படகுகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன.கடற்படை அதிகாரிகளினால் சர்வதேச கடற்பரப்பில் வைத்து இந்திய கரையோர பாதுகாப்பு அதிகாரிகளிடம் நேற்றுமுன்தினம் படகுகளை கையளித்ததாக கடற்படை தெரிவித்தது.

கைப்பற்றப்பட்ட இந்திய மீனவர்களின் படகுகள் காங்கேசன்துறை கடற்படைதளத்திலுள்ள இறங்குதுறையில் நங்கூரமிடப்பட்டிருந்தன. இவற்றை திருத்துவதற்காக இந்திய பொறியியலாளர்கள் கடந்த வாரம் இலங்கை வந்திருந்தார்கள். திருத்தப்பட்ட நிலையில் குறித்த படகுகள் இந்தியாவிடம் கையளிக்கப்பட்டன.(பா)

Tue, 01/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை