அம்பாறையில் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு சேவைநலன் பாராட்டு விழா

அம்பாறை மாவட்டக கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் உத்தியோகத்தர்களின் நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் சேவைநலன் பாராட்டு விழா அம்பாறை மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ரீ.எம்.நாகீப் தலைமையில் நேற்று (14) அட்டாளைச்சேனை அல்-சக்கீப் பேங்கூஸ் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் பிரதம அதிதியாகவும்,கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாணப்பணிப்பாளர் கவிதா உதயக்குமார் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டு உத்தியோகத்தர்களுக்கான நினைவுப்பரிசில்களை வழங்கி வைத்தனர்.

40வருட காலம் கிராம அபிவிருத்தித் திணைக்களத்தில் சேவையாற்றி அம்பாறை மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தராகவிருந்து அண்மையில் ஓய்வு பெற்ற ஏ.பீ.எம்.சரீபின் சேவையினைப்பாராட்டி பொன்னாடை போர்த்தி, வாழ்த்துப்பத்திரம் மற்றும் நினைவுப்பரிசு வழங்கி இதன்போது கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதில் கிராம அபிவிருத்தித் திணைக்களத்தில் சேவையாற்றி தற்போது வேறு நிறுவனங்களுக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றவர்களுக்கும்நினைவுப்பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் திருகோணமலை,மட்டக்களப்பு,அம்பாறை மாவட்டங்களில் கடமையாற்றும் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

(ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்– எம்.ஐ.எம். றியாஸ்)

Tue, 01/15/2019 - 11:56


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை