மேடையில் கத்திக்குத்துக்கு உள்ளான மேயர் உயிரிழப்பு

அறக்கட்டளை கூட்டம் ஒன்றில் பங்கேற்றபோது மேடையிலேயே கத்தியால் குத்தப்பட்ட போலந்தின் டேன்சிக் நகர மேயர் பாவேவு அடமோவிட்ச் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்தக் கூட்டத்தில் நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் முன்னிலையிலேயே அவர் குத்தப்பட்டார். உடனடியாக உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு ஐந்து மணி நேரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், அவரை மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை.

இந்தக் கொலையைச் செய்ததாக 27 வயதுள்ள, ஸ்டெபான் என்ற பெயருள்ள ஒரு நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குத்தியவுடன் “அடமோவிட்ச் இறந்தார்” என்றும், சிவிக் பிளாட்பார்ம் என்ற அந்த மேயரின் கட்சியால் தாம் தவறாக தண்டிக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்ட அந்த நபர் மேடையிலேயே கத்தியுள்ளார்.

அடமோவிட்ச் இறந்துவிட்டார் என்பதை போலந்தின் சுகாதாரத் துறை அமைச்சர் லூகாஸ் சுமோவ்ஸ்கி ஊடகங்களிடம் தெரிவித்தார்.

Wed, 01/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை