மலேசியாவிலிருந்து பெருந்தொகையான பாலியல் ஊக்குவிப்பு மாத்திரைகளை நாட்டுக்குள் கடத்தி வந்த சந்தேக நபரை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கம்பஹா உடுகம்பொல பிரதேசத்தைச் சேர்ந்த இலங்கைப் பிரஜையே இவ்வாறு பாலியல் மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டிருப்பதாக சுங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் சுனில் ஜயரட்ண தெரிவித்தார்.
மலேசியாவிலிருந்து யூ.எல் 315 விமானம் மூலம் இலங்கையை வந்தடைந்த இந் நபர் கிறீன் செனலுக்கூடாக வெளியேற முற்பட்டபோதே சுங்க அதிகாரிகள் அவரிடமிருந்த பெருந்தொகையான பாலியல் ஊக்குவிப்பு மாத்திரைகளை கைப்பற்றியுள்ளனர்.
கைப்பற்றப்பட்டுள்ள மாத்திரைகளின் மொத்த பெறுமதி 04 இலட்சத்து 98 ஆயிரத்து 952 ரூபாவென்றும் சுங்கத்திணைக்களம் மதிப்பீடு செய்துள்ளது.
சுங்கத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் எம்.எ கருணாரத்ன தலைமையில் பாலியல் மாத்திரைகள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
லக்ஷ்மி பரசுராமன்
from tkn