4 இந்திய மீனவர்கள் இழுவை படகுடன் கைது

இலங்கை கடல் எல்லையில் சட்டவிரோதமாக மீன்பிடிப்பில் ஈடுபட்ட நான்கு இந்திய மீனவர்கள் இழுவைப் படகுடன் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு கடற்பிரதேசத்தில் வைத்து கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டு மருத்துவ பரிசோதனையின் பின்னர் யாழ். உதவி கடற்றொழில் பணிப்பாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளனர். இந்த வருடத்தில் மாத்திரம் இலங்கை கடல் எல்லையில் சட்டவிரோதமாக மீன்பிடித்த 24 மீனவர்கள் 4 படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்னர்.

இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக மீன்பிடிக்கும் மீனவர்களை தடுக்க கடற்படை தொடர்ந்து நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

(பா)

Tue, 01/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை