அரசாங்க ஊழியர்கள்: இம்மாதம் முதல் அதிகரித்த சம்பளத்தின் 4ம் கட்டம்

நாடளாவிய ரீதியில் உள்ள சகல அரசாங்க ஊழியர்களும் 2016ஆம் ஆண்டில் அதிகரிக்கப் பட்ட சம்பளத்தின் நான்காம் கட்ட அதிகரிப்பை இம் மாதம் முதல் பெற உள்ளதாக பொது நிருவாக அமைச்சு அறிவித்துள்ளது. 

 அரச சேவையில் உள்ள சகல அரசாங்க ஊழியர்களதும் சம்பளங்கள் 2016ஆம் ஆண்டு அதிகரிக்கப்பட்டன. அதிகரிக்கப்பட்ட சம்பளங்களை ஐந்து கட்டங்களாக வழங்கத்  தீர்மானிக்கப்பட்டதன் அடிப்படையில் ஏற்கனவே மூன்று கட்டங்களில்  சம்பளங்கள் வழங்கப்பட்டிருந்தன. 

ஒவ்வொரு கட்டத்திலும் 2500ரூபா முதல் 10,000ரூபா வரை சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதன் நான்காம் கட்டம் இவ்வருடம் ஜனவரியிலும் ஐந்தாம் கட்டம் 2020ஆம் ஆண்டிலும் வழங்கப்படுமென பொதுநிருவாக அமைச்சு மேலும் அறிவித்துள்ளது. 

2015 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட நல்லாட்சி அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதியே மேற்படி சம்பள அதிகரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.   

(சாய்ந்தமருது குறூப் நிருபர்)

Thu, 01/10/2019 - 16:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை