வலி.வடக்கில் இராணுவத்திடம் இருந்த 39 ஏக்கர் காணிகள் மக்களிடம் கையளிப்பு

வலி.வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 39ஏக்கர் காணிகள் காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

தையிட்டி மற்றும் ஒட்டகப்புலம் பகுதிகளில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த மேற்படி காணிகளே இன்று (22) மக்களின் மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காணிகள் விடுவிப்புக்கான அறிவிப்பினை நேற்று(21)முல்லைத்தீவிற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்திருந்தார்.

இதன்படி நேற்று(21)வலி.வடக்கு ஜே.249தையிட்டி வடக்கு, ஜே.250தையிட்டி தெற்கு ஆகிய பகுதிகளில் 19ஏக்கர் காணி விடுவிப்புக்கான சான்றிதழை காங்கேசன்துறை இராணுவ பொறுப்பதிகாரி வலி.வடக்கு பிரதேச செயலாளரிடம் கையளித்தார்.

ஒட்டகப் புலத்தில் விடுவிக்கப்பட்ட 20ஏக்கர் காணிக்கான சான்றிதழ்கள்இன்னும்பிரதேச செயலாளரிடம் இராணுவ தரப்பால் கையளிக்கப்படவில்லை.இருந்த போதும் விடுவிப்புக்கான அறிவித்தல் விடப்படட ஒட்டகப்புலப் பகுதிகளை மக்கள் சென்று பார்வையிடுவதற்கு நேற்று(21)அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(புங்குடுதீவு குறூப் நிருபர்-பாறுக் ஷிஹான்)

 

Tue, 01/22/2019 - 16:15


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை