கொட்டகலை ரொசிட்டா பாற் பண்ணை வனப்பகுதியில் தீ; 25 ஏக்கர் காடு நாசம்

கொடகலை ரொசிட்டா தேசிய பாற்பண்ணைக்கு சொந்தமான வனப்பகுதியில் ஏற்பட்ட தீயினால் 25ஏக்கர் காடு எறிந்து நாசமாகியதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

கொட்டகலை ரொக்கில் தோட்ட குடியிருப்பை அண்மித்த பகுதியிலுள்ள மாணா புல் வனப்பகுதியிலே இன்று (09)பிற்பகல் 02  மணியளவில் தீ பரவியது.

அதிக காற்றுடன் கூடிய வெப்பகாலநிலையினால் தீ பரவல் அதிகரித்துள்ளநிலையில் வனப்பகுதியை ஊடருத்துச்செல்லும் மின் வினியோகமும் பாதிப்படைந்துள்ளது.

அதிக காற்றினால் ஏற்ட்டுள்ளதீச்சுவாளையினால் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாத நிலை காணப்படுவதாகவும் தொடர்ச்சியாக காடுகளுக்கு தீ வைக்கும் விசம செயலில் சிலர் ஈடுட்டுவருவதாகதிம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

(நோட்டன் பிரிட்ஜ் நிருபர்– எம்.கிருஸ்ணா)

 

Wed, 01/09/2019 - 16:31


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை