வடக்கு சீனாவின் நிலக்கரி சுரங்க கூரை சரிந்து விழுந்து 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்மு நகருக்கு அருகில் இருக்கும் லிஜிகு சுரங்கத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இந்த விபத்தில் 66 சுரங்கத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சீனாவின் அரச செய்தி நிறுவனமான சின்ஹுவா குறிப்பிட்டுள்ளது. பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றபோது சீனாவில் சுரங்க விபத்துகள் பொதுவாக நிகழ்ந்து வருகின்றன. கடந்த ஒக்டோபரில் கிழக்கு செங்டொங் மாகாணத்தில் இடம்பெற்ற நிலக்கரி சுரங்க விபத்து ஒன்றில் 21 பேர் கொல்லப்பட்டனர்.
Mon, 01/14/2019 - 12:18
from tkn