தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி இளைஞர் விவசாயத் திட்டம் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 25 வீடுகளைக் கொண்ட ஆனந்தபுரம் எனும் மாதிரிக் கிராமம் இன்று(28) மக்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இவ்வீடுகளை மக்களிடம் கையளித்தார். இந்த மாதிரிக் கிராமம் செமட்ட செவன திட்டத்தின்கீழ் அமைக்கப்ட்டுள்ள 161 வது மாதிரிக் கிராமமாகும்.
இந்நிகழ்வில்தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுபபினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி சிறிகாந்த, போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ஆர்.இராகுலநாயகி, அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள், பொதுமக்கள்உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது வாழ்வாதாரக் கடன், மூக்குக்கண்ணாடி, காணி உறுதிப்பதிரம், மற்றும்இவ்வீட்டுத்திட்டத்தை நிர்மாணிப்பதற்குப் பணியாற்றிய அரச அதிகாரிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
(பெரியபோரதீவு தினகரன் நிருபர்- வ.சக்திவேல்)
from tkn