பெரு நாட்டில் சுவர் சரிந்து 15 பேர் பலி

பெரு நாட்டில் திருமண நிகழ்வொன்றின்போது ஹோட்டல் சுவர் சரிந்து விழுந்து 15 பேர் பலியாகியுள்ளனர்.

தெற்கு பெருவின் அன்டியன் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் சரிந்து விழுந்த ஹோட்டல் சுவர் மற்றும் கூரைக்கு கீழ், நடனமாடிக் கொண்டிருந்த பலரும் சிக்கியதாக தேசிய சிவில் பாதுகாப்பு தலைவர் ஜோர்ஜ் சாவேஸ் குறிப்பிட்டுள்ளார். இதில் இடிபாடுகளில் இருந்து குறைந்தது 30 பேர் மீட்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அந்த நகரில் ஐந்து நாட்களாக பெய்த மழை சுவர் சரிந்து விழுவதற்கு காரணமாகி இருப்பதாக உள்ளூர் சிவில் பாதுகாப்பு தலைவர் ரஸ்பி செலா குறிப்பிட்டுள்ளார்.

Tue, 01/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை