வரவு-செலவுத் திட்ட யோசனைகளை பெப்.11 முன் அனுப்ப வேண்டுகோள்

AMF

2019 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட முன்மொழிவுகளை பெப்ரவரி 11 ஆம் திகதிக்கு முன் அனுப்பி வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர இவ் வேண்டுகோளை விடுத்துள்ளார்.

அதற்கமைய பொதுமக்கள் மற்றும் அனைத்துத் தரப்பினரும், 2019 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட முன்மொழிவுகளை [email protected] எனும் மின்னஞ்சலுக்கு அல்லது தபால் மூலம், பணிப்பாளர் நாயகம், வர்த்தக மற்றும் முதலீட்டுக் கொள்கைகள் திணைக்களம், செயலகம், நிதி மற்றும் ஊடக அமைச்சு, கொழும்பு 01. எனும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

வலுவான பொருளாதாரம் மற்றும் வளமான நாடு எனும் தொனிப்பொருளின் கீழ் எதிர்வரும் மார்ச் 5 ஆம் திகதி வரவு-செலவு திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

Thu, 01/24/2019 - 14:47


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை