கோத்தாபயவுக்கு எதிரான வழக்கு 11 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு

A Mohamed Fais

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேருக்கு எதிரான வழக்கை ஜனவரி மாதம் 11 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கவிசேடமேல் நீதிமன்றம்  அறிவித்துள்ளது. 

குறித்த வழக்கில் சம்பத் அபேயகோன், சம்பத் விஜயரத்ன, சம்பா ஜானகி ஆகிய மூவரடங்கிய நீதிபதிகளின் முன்னிலையில் எடுத்துக் கொள்ளபட்டபோது இவ்வாறு அறிவிக்கப்பட்டது.

​டீ.ஏ. ராஜபக்ஷ நூதனசாலை அமைப்பதற்குரூபா33மில்லியன் அரச நிதியைப் பயன்படுத்தியதாக கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்தால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இதன்போது குறித்த வழக்குடன் தொடர்புடைய ஆவணங்கள் சில இதுவரை தமக்கு கிடைக்கவில்லை என்று பிரதிவாதிகள் சார்ப்பில் ஆஜரான வழக்கறிஞர் அலி சப்ரி நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார். 

பிரதிவாதிகள் கேட்டுள்ள ஆவணங்களை உடனடியாக அவர்களுக்கு வழங்குமாறும் குறித்த ஆவணங்கள் உரிய முறையில் வழங்கப்பட்டனவா என்பது தொடர்பில் விசாரணை செய்ய குறித்த வழக்கை 11 ஆம் திகதி ஒத்திவைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இன்றை வழக்கிற்கு பிரதிவாதியான கோத்தாபய ராஜபக்ஷ சமூகமளித்திருக்கவில்லை. அவர்கடந்த வழங்கின் போது வழங்கப்பட்ட அனுமதியின் அடிப்படையில் வெளிநாடு சென்றுள்ளநிலையில் குற்றஞ்சாட்டப்பட்ட ஏனைய 06 பேரும் நீதிமன்றில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
 

Thu, 01/03/2019 - 13:51


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை