உப தலைவர் திக்வெல்ல; இலங்கை குழாம் அறிவிப்பு
நியூசிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள ஒருநாள் மற்றும் ரி20 கிரிக்கெட் போட்டி தொடருக்கான இலங்கை குழாம் இன்று (14) அறிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், ஒரு நாள் மற்றும் ரி20 குழாமின் தலைவராக லசித் மாலிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான லசித் மாலிங்க, இதற்கு முன்னர் இலங்கை கிரிக்கெட் அணியின் ரி20 குழாமின் தலைவராக செயற்பட்டுள்ளபோதும், ஒரு நாள் போட்டிகளில் தலைவராக நியமிக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும்.
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே நடைபெறவுள்ள 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் ஒரு ரி20 போட்டிகளைக் கொண்ட கிரிக்கெட் தொடர் நாளை (15) ஆரம்பமாகவுள்ள டெஸ்ட் தொடருடன் ஆரம்பமாகவுள்ளன.
இத்தொடரின் டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றும் டெஸ்ட் அணி ஏற்கனவே நியூசிலாந்து சென்றுள்ள நிலையில் ஒருநாள் மற்றும் ரி20 போட்டிகளுக்கான குழாம் இன்று அறிவிக்கப்பட்டது.
இதன்படி 17 பேர் கொண்ட இலங்கை குழாமின் தலைவராக லசித் மாலிங்கவும் உபதலைவராக நிரோஷன் திக்வெல்லவும் நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை நீண்ட காலமாக அணியில் இடம்பெறாதிருந்த சீக்குகே பிரசன்ன, அசேல குணரத்ன மற்றும் தசுன் சானக ஆகியோரும் இலங்கை அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளனர்.
இலங்கை குழாம்
- லசித் மாலிங்க (தலைவர்)
- நிரோஷன் திக்வெல்ல (உப தலைவர்)
- அஞ்சலோ மெத்திவ்ஸ்
- தினேஷ் சந்திமால்
- குசல் மெண்டிஸ்
- குசல் ஜனித் பெரேரா
- அசேல குணரத்ன
- தனஞ்சய டி சில்வா
- திசர பெரேரா
- தசுன் சானக
- லக்ஷான் சந்தகன்
- சீக்குகே பிரசன்ன
- துஷ்மந்த சமீர
- கசுன் ராஜித
- நுவன் பிரதீப்
- லஹிரு குமார
from tkn