தாய்லாந்து பரா திறந்த மேசைப்பந்து தொடரில் இலங்கை வீரர் தினேஷூக்கு தங்கப் பதக்கம்

தாய்லாந்து மேசைப் பந்து சம்மேளனம் மற்றும் தாய்லாந்து பரா மேசைப்பந்து சம்மேளனம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த தாய்லாந்து திறந்த மேசைப்பந்து சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் பங்கேற்ற இலங்கை வீரர் தினேஷ் தேஷப்பிரிய தங்கப் பதக்கம் வென்றார்.

தாய்லாந்தின் சியெம் மே நகரில் உள்ளபான் லேன் டொங் உள்ளக அரங்கில் அண்மையில் நிறைவுக்கு வந்தகுறித்தபோட்டித் தொடரில் ஆண்களுக்கானஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இலங்கையின் தினேஷ் தேஷப்பிரியமற்றும் ஹொங் கொங்கின் வோங்க் செய் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 3க்கு 2 என்றசெட் கணக்கில் தினேஷ் அபார வெற்றி பெற்றுதங்கப் பதக்கத்தைதனதாக்கினார். இதேநேரம், தினேஷுக்கு பலத்த போட்டியைக் கொடுத்த ஹொங் கொங் வீரர் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார்.

இப்போட்டித் தொடரின் ஆரம்பசுற்றின் முதல் போட்டியில் கொரியவீரர் லீஷேகோவை 3க்கு 1 எனவும், 2ஆவது போட்டியில் நெதர்லாந்து வீரர் ஹெயிப்னன் டோனியை 3க்கு 1 எனவும் வீழ்த்திய தினேஷ் தேஷப்பிரிய, இறுதிலீக் போட்டியில் இந்திய வீரர் ரன்ஜித் சிங்கை 3க்கு 0 என்றசெட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இதன்படி,அரையிறுதிப் போட்டியில் கஸகஸ்தான் வீரர் எரிக்யேவை எதிர் கொண்ட தினேஷ்,போட்டியை 3க்கு 0 என்றசெட் கணக்கில் கைப்பற்றி இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றமை குறிப்பிடத்தக்கது.

(பீ.எப் மொஹமட்) 

 

Thu, 12/27/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை