நட்புறவுடன் செயல்படுவதற்கு பொருத்தமான காலம்

பிரதமர் ரணில் வாழ்த்துச் செய்தி

இலங்கையர் அனைவரும் பேதமின்றி சகோதரத்துவத்துடனும் நட்புறவுடனும் செயல்படுவதற்கு நத்தார் காலம் பொருத்தமானது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நத்தார் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து அச்செய்தியில், நத்தார், மகிழ்ச்சியை கொண்டாடும் காலமாகும். நத்தார் வளமான எதிர்காலத்தை எதிர்பார்த்து கடந்த காலத்தை ஞாபகப்படுத்தும் காலமாகும். இயேசுவின் வாழ்க்கை, சீர்குலைத்து போன உலகிற்கு எதிர்பார்ப்பையும் நல்லிணக்கத்தையும் கொண்டுவந்து இன, மத, மொழி பேதமின்றி அனைவரும் மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் காலமாகும்.

இயேசு பாலகன் எமக்குக் கொண்டுவரும் மகிழ்ச்சி மற்றும் அமைதி உங்களுக்கு உரித்தாகட்டும் என நான் பிரார்த்தனை செய்கின்றேன். அனைவருக்கும் இனிய நத்தார் வாழ்த்துக்கள்.

Tue, 12/25/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை