இஸ்ரேலியர் தாக்குதலில் மூன்று பலஸ்தீனர்கள் பலி

ஜெரூசலம் பழைய நகரில் இஸ்ரேல் எல்லை காவல் படையினர் இருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய குற்றசாட்டில் பலஸ்தீனர் ஒருவர் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார்.

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனர்களுக்கு இடையில் வன்முறைகள் அதிகரித்திருக்கும் நிலையிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதில் இரு பொலிஸாரும் உயிராபத்து இன்றி காயங்களுக்கு உள்ளாகி இருப்பதாக இஸ்ரேலிய பொலிஸ் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தாக்குதல் நடத்தியவர் குறித்த விபரத்தை அந்தப் பேச்சாளர் வெளியிடவில்லை.

பலஸ்தீனர் மற்றும் இஸ்ரேலியர்களுக்கு இடையில் பிளவுபட்ட பகுதியாக இருக்கும் ஜெரூசலம் பழைய நகர் இஸ்ரேலிய படையினரின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது.

மறுபுறம் துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஆக்கிரமிப்பு மேற்குக் கரையில் புதன்கிழமை பின்னேரம் மற்றும் நேற்றுக் காலை இரு வேறு சம்பவங்களில் இரு பலஸ்தீனர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

Fri, 12/14/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை