இரு வேறு துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் காயம்

Rizwan Segu Mohideen
இரு வேறு துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் காயம்-2 Shooting Incidents-2 Injured

பெலியத்த மற்றும் சீதுவை பிரதேசங்களில் இடம்பெற்ற இரு வெவ்வேறு துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் இருவர் காயமடைந்துள்ளனர்.

சீதுவை, லியனகேமுல்ல பிரதேசத்தில் இன்று (19) அதிகாலை 2.30 - 3.00  மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பிரதேசத்திலுள்ள, இரவு விடுதி ஒன்றில் இத்துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விடுதிக்குள் நுழைந்த குழுவொன்று,விடுதியின் பணியாளர் ஒருவருடன் ஏற்பட்ட வாய் தகராறு காரணமாக துப்பாக்கி சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தில் விடுதிக்குள் நுழைந்த, சீதுவை பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதான நபர் ஒருவர் காயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விடுதியின் உரிமையாளரினால் குறித்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேகநபர் அப்பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ள நிலையில், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கையில் சீதுவை பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, பெலியத்த, கெட்டமான்ன, கொஸ்கஸ் சந்தியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

நேற்று (18) இரவு இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் 24 வயதான நபர் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளதோடு அவர் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பெலியத்த பொலிசார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Wed, 12/19/2018 - 11:55


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை