நபர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா உள்ளிட்ட நால்வர் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த நால்வரும் இன்றைய தினம் (20) பெல்மதுளை நீதவான் நீதிமன்றில்முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து அவர்களுக்கு எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (16) கொடகவெல நகரில் வைத்து, நபர் ஒருவரை தாக்கியதாக தெரிவிக்கப்படும் முறைப்பாடு தொடர்பில் குறித்த நால்வரும் இன்றைய தினம் (20) கொடகவெல பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
இதயைடுத்து, சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து அவர்கள் நால்வருக்கும் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.
from tkn