சவளக்கடை பொலிஸ் நிலைய ஏற்பாட்டில் மின்னொளி கரப்பந்தாட்டப் போட்டி

அம்பாறை மாவட்டதிலுள்ள பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களிடையே விளையாட்டின் ஊடாக நல்லுறவை ஏற்படுத்தும் மின்னொளி கரப்பந்தாட்டப் போட்டி சவளக்கடை பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் அண்மையில் பொலிஸ் மைதானத்தில் நடைபெற்றது.

இறுதிப் போட்டிக்கு சவளக்கடை பொலிஸ் அணியும் அக்கரைப்பற்று பொலிஸ் அணியும் தெரிவாகி 18 இற்கு 25 என்ற புள்ளி வித்தியாசத்தில் சவளக்கடை பொலிஸ் அணி வெற்றி பெற்றது.

சவளக்கடை பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி ஏ.எம்.எம்.நஜீப் தலைமையில் நடைபெற்ற சுற்றுப் போட்டியில் அம்பாறை உதவி பொலிஸ் அத்தியட்சகர் சாமந்த விஜயசேகர, கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் எச்.எம்.ஏ.பீ.ஹேரத், சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா, கல்முனை தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜே.கே.எஸ்.கே.ஜயநெற்றி, சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இப்னு அஸார், அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.எம்.ஏ.கே.பண்டார, மத்தியமுகாம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.எம்.ஏ.விஜயசிங்க உள்ளிட்ட பொலிஸ் உயர் அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

(சவளக்கடை குறூப் நிருபர்) 

 

Sat, 12/15/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை